states

img

தாமோதர் கார்ப்பரேஷனுக்கும் எங்களுக்கும் எந்த உறவும் கிடையாது : மம்தா பானர்ஜி

கொல்கத்தா பருவநிலை மாற்றத்தால் நாட்டில் கணிக்க முடியாத அளவிற்கு மழை வெளுத்து வாங்கி  வருகிறது. கடந்த மாதம் நாட்டின் பாலைவன பிரதேசமான ராஜஸ்தான் கூட வெள்ளத்தில் மிதந்த சம்பவம் அரங்கேறிய நிலை யில், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பரவ லாக கனமழை கொட்டிவருகிறது.

தாமோதர் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதியான ஜார்க்கண்டின் சோட்டா நாக்பூர் பீடபூமியில் உள்ள காமர்பட் மலையில் கனமழை புரட்டியெடு த்து வரும் நிலையில், தாமோதர் அணை முழு கொள்ளளவை எட்டி யுள்ளது. இதனால் ஜார்க்கண்ட் அரசு தங்கள் மாநில நலனை கணக்கில் கொண்டு தாமோதர் அணையில் உபரி நீரை வெளி யேற்றி வருகிறது. இதனால் தாமோ தர் ஆற்றில் வெள்ளம் கரைபுரண் டோடி வருகிறது. தாமோதர் ஆறு மேற்கு வங்கத்திலும் பாய்ந்து  வரும் நிலையில், மேற்குவங்கத் தின் மேதினிபூர், ஹவுரா மாவட்டங் களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இந்நிலையில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மேதினி பூர் மாவட்டத்தின் பன்ஸ்குரா மற்றும் ஹவுரா மாவட்டத்தின் உதய்நாராயண்பூருக்கு வெள்ள நிலவரங்களை பார்வையிட சென் றார். அதன்பிறகு நடைபெற்ற  செய்தியாளர்கள் சந்திப்பில், “மேற்கு வங்கத்தில் இருப்பது மழை நீர் அல்ல. ஜார்க்கண்ட் அரசு  நிறுவனமான தாமோதர் பள்ளத் தாக்கு கார்ப்பரேஷன் (டிவிசி) அதன் அணையில் இருந்து திறந்து விட்ட தண்ணீர். இது மனிதனால் உருவாக்கப்பட்ட வெள்ளம். டிவிசி-யுடன் அவ்வப்போது நாங்கள் கூட்டங்கள் நடத்து கிறோம். டிவிசி தலைவரை நான் நேரடியாக தொடர்பு கொண்டு அதிக அளவில் தண்ணீர் திறந்து விடவேண்டாம் என்று வேண்டு கோள் விடுத்திருந்தோம். ஆனால் ஜார்க்கண்ட் மாநிலத்தைக் காப்பாற்ற தாமோதர் பள்ளத்தாக்கு அணைகளில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இனி டிவிசியுடன் எந்த தொடர்பையும் வைத்துக்கொள்ளமாட்டோம்” என அவர் கூறினார்.

தோல்வியை மறைக்க ஜார்க்கண்ட் அரசு மீது பழி?

தாமோதர் ஆற்று வெள்ளத் தால் மேற்கு வங்க மாநிலத்தில் வெள்ளம் ஏற்பட்டது உண்மை தான். ஆனால் 50% அளவில் மட்டுமே அங்கு வெள்ளம் ஏற்பட் டது. மேற்கு வங்கத்தில் கடந்த 5  நாட்களாக தொடர்ச்சியாக கன மழை பெய்து வருகிறது. இந்த  கனமழையாலும், தாமோதர் ஆற்றின் உபரி நீராலும் மேதினி பூர், ஹவுரா மாவட்டங்கள் வெள்ள த்தில் சிக்கியுள்ளன. ஆனால் தனது அரசின் தோல்வியை மறைக்க ஜார்க்கண்ட் அரசின் கட்டுப் பாட்டில் உள்ள தாமோதர் ஆற்றின்  வெள்ளத்தால் தான் மேதினிபூர், ஹவுரா மாவட்டங்கள் மூழ்கியுள் ளன என மம்தா குற்றம் சாட்டி திசை  திருப்பியுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.